உலகின் உயரமான முருகபெருமான் சிலை.... 


சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திர கவுண்டம்பாளையத்தில் உலகிலேயே மிக உயரமான முருகன் சுவாமி திருவுருவ சிலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  இரண்டரை வருடமாக இந்த முருகன் திருவுருவ சிலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே பத்துமலைக் குகை கோயிலின் நுழைவாயிலில் உலகிலேயே மிக உயரமான முருகன் சுவாமியின் திருவுருவ சிலை அமைக்கப்பட்டது. அதன் உயரம் 108அடி ஆகும். ஆனால் இந்த முருகன் திருவுருவச்சிலை 126 அடி உயரம் கொண்டது. 

மலேசியா பத்துமலை முருகன் தரிசிக்க பல நாடுகளில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அதைப்போலவே தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திர கவுண்டன் பாளையத்தில்  அமையும் முருகன் திருவுருவ சிலைக்கு பக்தர்கள் அயல் நாடுகளில் இருந்தும் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

மலேசியாவில் முருகன் சிலையை வடிவமைத்த தமிழகத்தை சேர்ந்த திருவாரூர் தியாகராஜன் அவர்களின் குழுவினர் இந்த திருவுருவ சிலையை தற்போது முழுவீச்சில் வடிவமே வடிவமைத்து வருகின்றனர்.

 தரை தளத்தில் இருந்து 146 அடியாகவும் முருகன் சிலை மட்டும் 126 அடி உயரமும் கொண்டதாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.அடுத்த ஆண்டு பங்குனி உத்தரத்தில் இந்த திருஉருவச்சிலை முழுமையாக நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடை பெறுவதற்கு கோயில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். 



Leave a Comment