பக்தர்கள் வெள்ளத்தில் திருவாரூர் தேர் மிதந்து வந்த வீடியோ காட்சி...


உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்றது.

பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு 'ஆரூரா தியாகோசா' என விண்ணதிரும் பக்தி முழக்கத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.

காலை 7.15 மணிக்கு சன்னதி தெருவில் தொடங்கிய தேரோட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்துகொள்வதால் தேரோட்டம் நடைபெறும் நான்கு வீதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பிற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
 



Leave a Comment