குடும்ப ஒற்றுமைக்கு கேதார கௌரி விரதம்


கடுமையான விரதம் மேற்கொண்டே உமையம்மை கார்த்திகை பௌர்ணமி அன்று இறைவனின் இடப்பாகத்தைப் பெற்றார். அவ்வாறாக அம்மையும் அப்பனும் இணைந்து உமையொரு பாகனாக அர்த்தநாரீஸ்வராக காட்சியருளிய தலம் திருவண்ணாமலை என்று அருணாசல புராணம் குறிப்பிடுகிறது.

எனவே கார்த்திகை பௌர்ணமி அன்று அம்மை மற்றும் அப்பனை நினைத்து விரதமுறை மேற்கொள்ளும் இவ்விரத முறை உமாகமேஸ்வர விரதம் என்று அழைக்கப்படுகிறது.

இவ்விரத்தில் காலையில் மட்டும் உண்ணா நோன்பு மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரத முறை மேற்கொள்ளுவதால் குடும்ப ஒற்றுமை ஏற்படும். கணவன் மனைவி சண்டை சச்சரவுகள் தீரும்.



Leave a Comment