ஆசையை விட்டொழிங்கள்……..


வாழ்க்கையின் முழுமையான இன்பத்தை அடைய முதலில் பொருட்களின் மீதிருக்கும் ஆசையைக் குறைத்துக்கொள்ளுங்கள். ஆசையே ஒருவரது நன்னடத்தையை சோதிக்கிறது.

துவக்கத்தில் சிறியதாக இருக்கும் இந்த ஆசையே பேராசையாக மாறுகிறது. இதுவே, பல தவறுகளுக்கும் அடித்தளமாக அமைந்துவிடுகிறது. எனவே ஆசையில் இருந்து விடுபட்டு வாழுங்கள்.

பொருளையும், செல்வத்தையும் ஒரு பொருட்டாகவே மதிக்காதிருங்கள். அவை உண்மையான இன்பம் எதையும் தந்துவிடாது. மாறாக அதிகமான துன்பங்களை மட்டுமே தரும்.

பொருள் வைத்திருப்பவர்கள் தங்களது சுற்றத்தாராலும், ஏன் பிள்ளைகளாலும்கூட ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே வாழ்கின்றனர். எனவே பொருளின் மீது ஆசை கொள்ளாதீர்கள்.

– ஆதிசங்கரர்



Leave a Comment