தம்பதியர்களுக்குள் ஒற்றுமை தழைத்திட....இந்திராணி மந்திரம்!


தன்னை நாடி வருபோரின் உயிரைக் காப்பதிலும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணையை அமைத்துத் தருவதிலும் இந்த அன்னை சிறப்புக்குரியவள். மேலும் கணவன்-மனைவிக்குள் தாம்பத்ய சுகத்தைத் தருபவளும் இந்த அன்னையே. இவளை முறையாக வழிபாடு செய்யும் திருமணமாகாத ஆண்களுக்கு, குணத்தில் சிறந்த மனைவியும், திருமணமாகாத பெண்களுக்கு குணத்தில் சிறந்த கணவனும் அமைவர்.

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே

வஜ்ர ஹஸ்தாயை தீமஹி

தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்

என்ற காயத்ரி மந்திரத்தை உச்சரித்து, இந்திராணியை வழிபாடு செய்து வந்தால் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணமும், கணவன்-மனைவிக்குள் ஒற்றுமையும் ஏற்பட்டு அவர்கள் வாழ்வு சிறப்படையும்.



Leave a Comment