கிரஹண தோஷ பாதிப்புகள் நீங்க சூரிய சந்திர ஸ்லோகம்!


கிரஹண தோஷங்கள் நிவர்த்தியடைய பின்வரும் ஸ்லோகத்தை மனதார உச்சரித்து. இறைவனை வணங்கி வந்தால் தோஷங்கள் விலகி சுபிட்சம் பெருகும்.

யோஸௌ: வஜ்ரதரோ தேவ: ஆதித்யானாம் ப்ரபுர்மாத:
சந்த்ரக்ரஹோ ப்ராகோத்தக்ரஹபீடாம் வயாப்ஹோதது.
யோஸௌ:தாம் தாத்ரோ தேவ: யமோ மஹிஷவாஹன:
சந்த்ரக்ரஹோ ப்ராகோத்தக்ரஹபீடாம் வயாப்ஹோதது.
யோஸௌ: சூலதரோ தேவ: பினாகிவ்ருஷவாஹன:
சந்த்ரக்ரஹோ ப்ராகோத்தக்ரஹபீடாம் வயாப்ஹோதது.
சந்திர கிரஹண பரிகார ஸ்லோகம்

வஜ்ராயுதம் ஏந்திய இந்திரனும், சூரிய சந்திரர்களும் இந்த சந்திரகிரஹண பீடையிலிருந்து எம்மைக் காக்கவேண்டும். எருமை மீது ஆரோகணித்தருளும் யமதர்மராஜன் உள்ளிட்ட அஷ்டதிக் பாலகர்களும்  இந்த சந்திர கிரஹண பீடையிலிருந்து எம்மைக் காத்தருள வேண்டும். ரிஷபத்தை தன் வாகனமாகக் கொண்ட வில்லும், சூலமும் ஏந்திய ஈசன் இந்த சந்திர கிரஹண பீடையிலிருந்து எம்மைக் காத்தருள வேண்டும். என்பது இந்த மந்திரத்தின் பொருளாகும்.



Leave a Comment