விளக்கு ஏற்றும் பொழுது பாட வேண்டிய மந்திரம்


விளக்கு ஏற்றும் பொழுது :
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும் விளக்கை
விளக்கும் விளக்குடையார்கள் விளக்கில் விளங்கும் விளக்கவர்தாமே


விளக்கை ஏற்றியபின் மலர் சொரிந்து :
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.


தூபம் காட்டும் போது பாட வேண்டிய மந்திரம் :
பெரும்புலர் காலை மூழ்கிப்
பித்தர்க்குப் பத்தர் ஆகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங்கு
ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால்
இடவல் லார்க்குக் கரும்பினில் கட்டி
போல்வார் கடவூர்வீரட்ட னாரே.



Leave a Comment