திருப்பதியில் சிறப்பு தரிசனம் ரத்து


கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருமலை வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எனவே மே, ஜூன் மாதங்களில், முதியோர், மாற்றுத்திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட குழந்தையுடன் வரும் பெற்றோருக்கு அளிக்கும் சிறப்பு தரிசனத்தை ரத்து செய்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள், முதியோர், மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தையுடன் திருமலைக்கு வரும் பெற்றோர்களுக்கு, மாதம் 2 நாட்கள் தலா 4,000 சிறப்பு டோக்கன்கள் வழங்கி தரிசன ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தற்போது பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், இந்த சிறப்பு தரிசன முறையை மே, ஜூன் மாதங்களில் ரத்து செய்வதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் நேற்று அறிவித்துள்ளது.



Leave a Comment