காளத்தியப்பர் கோவில்


ஆந்திர மாநில மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியிலிருந்து 38 கிமீ தொலைவில் அமைந்துள்ளது பஞ்சபூதங்களில் காற்றினை குறிக்கும் காளத்தியப்பர் திருக்கோயில். வாயுத்தலமான இங்கு இறைவன் வாயு லிங்கம் என்றழைக்கப்படுகிறார். சீ என்ற சிலந்தி, காளம் என்ற பாம்பு, அத்தி எனப்படும் யானை ஆகிய மூன்றும் இத்தல இறைவனை வழிபட்டு முக்தி பெற்றதால் இவ்விடம் சீகாளகத்தி என்றும், திருகாளகத்தி என்றும், ஸ்ரீகாளகத்தி என்றும் வழங்கப்படுகிறது. கண்ணப்பநாயனார் இத்தல இறைவன்மீது கொண்ட பேரன்பினால் தனது கண்களை தானம் செய்து முக்தி பெற்றார். கண்தானத்தில் உலகின் முன்னோடியாக கண்ணப்பர் திகழக் காரணமான தலம் என்னும் சிறப்புடையது. இக்கோயிலை சோழப் பேரரசின் முக்கிய அரசனான இராஜேந்திரச் சோழன் என்பவரால் கட்டப்பட்டு பின் பல மன்னர்களால் சீர்திருத்தம் செய்யப்பட்டது. அப்பர் தனது தேவாரப் பதிகத்தில் இத்தல அம்மை மற்றும் அப்பனைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். இங்கு இறைவன் காளத்தியப்பர் என்ற பெயரிலும், அம்மை ஞானப்பூங்கோதை என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.



Leave a Comment