காளஹஸ்தியில் பிப். 8 ஆம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் தொடக்கம்....


ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஆண்டுதோறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தை கோயில் நிர்வாகம் நடத்தி வருகிறது. அதன்படி, பிப்ரவரி 13-ஆம் தேதி மகா சிவராத்திரி வருவதை முன்னிட்டு, பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ நாள்களில் காளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை அம்மன் தனித்தனியாகவும் பல்வேறு வாகனங்களில் வலம் வர உள்ளனர். இதற்கான சுவரொட்டியை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. வருடாந்திர பிரம்மோற்சவத்தை ஒட்டி கோயிலில் முன்னேற்பாடுகள் குறித்து சித்தூர் மாவட்ட ஆட்சியர் பிரத்யும்னா கோயில் அதிகாரிகள், அறங்காவலர் குழுவுடன் கலந்துரையாடினார். பிரம்மோற்சவத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் காளஹஸ்திக்கு வருகை தர உள்ளதால், அவர்களுக்கு அன்ன தானம், குடிநீர், தங்குமிடம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.



Leave a Comment