துறையூர் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை


திருச்சி மாவட்டம், துறையூரில் நந்திகேசுவரர் கோயிலில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
துறையூர்-ஆத்தூர் சாலையிலுள்ள ஸ்ரீ நந்திகேசுவரர் கோயிலில் கார்த்திகை முதல் தேதியையொட்டியும், பக்தர்கள் தடையின்றி விரதமிருந்து சபரிமலை சென்று வர வேண்டியும் சிறப்பு கணபதி ஹோமமும் அதனைத் தொடர்ந்து விநாயகருக்கும், ஐயப்ப சுவாமி சிலைக்கும் நெய் உள்ளிட்ட வாசனை திரவியங்கள், பழங்கள், பால், தயிர் கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. ஐயப்ப பக்தர்களுக்கு கோயில் குரு க்கள்பஞ்சாபிகேசனும், குருசாமிகளும் மாலை அணிவித்து விரதம் கடைபிடிக்கும் முறையை கூறினார்.



Leave a Comment