தஞ்சை பெரிய கோவிலில் 1008 சங்கு அபிஷேகம்


கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் 1008 சங்கு அபிஷேகம் நடைபெற்றது. கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி  கார்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலிலுள்ள பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற உள்ளது. பெருவுடையார் சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவிலான சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம்  நடத்தப்பட்டது.

இதனையடுத்து 1008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் பெருவுடையாருக்கு பால், சந்தனம் , மஞ்சள்  , அன்னம்,  விபூதி உள்ளிடட் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம்   செய்யப்பட்டது . பின்னர் பெருவுடையாருக்கு முன்பு புனித நீர் நிரப்பப்பட்ட   1008 சங்குகளை வைத்து அபிஷேகம் மற்றும் தீபாரதனை  காண்பிக்கப்பட்டது.

அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற -ந்தேதி 27-வது சோமவாரமும், அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந்தேதி 3-வது சோமவாரமும், 11-ந்தேதி கடைசி சோமவாரமும் கடைபிடிக்கப்படுகிறது.



Leave a Comment