பழனி முருகனின் ஆண்டி கோல தரிசனத்தின் ரகசியம்...!


வாழ்க்கையில் தீராத கஷ்டம், தடைகள், குடும்பத்தில் சண்டை, வருமானம் இல்லாமை, போன்ற பல்வேறு விதமான பிரச்சனைகளை மட்டுமே எதிர் கொண்டு வாழும் சூழ்நிலை இருந்தால்  நிச்சயம் இதற்கு கர்ம வினைகள் தான் காரணம் ஆகும். முருகப்பெருமானை பழனி மலைக்கு சென்று தரிசனம் செய்தால் நம்முடைய கர்மவினைகள் கட்டாயம் குறையும்.

வாழ்வில் தடை போட்டி பொறமை   கஷ்டம் போன்ற பல பிரச்சனைகள் விலக ஆண்டி கோலத்தில் இருக்கும் பழனியாண்டவர் முருகனை தரிசனம் செய்வதால் நன்மைகள் பல உண்டாகும். பழனி  முருகப்பெருமானை  ஆண்டி கோலத்தில் இருக்கும் போது தரிசனம் செய்தால் நம்மை ஆண்டியாக ஆக்கி விடுவார் என்றும், ராஜ அலங்காரத்தில் இருக்கும் போதும் மட்டுமே தரிசனம் செய்தால்  ராஜ வாழ்க்கை கிடைக்கும் என்றும் பலர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.

ஆனால் பழனி முருகனை தண்டாயுதபாணி கோலத்தில் அதாவது ஆண்டி அலங்காரத்தில் தரிசிப்பது தான் சிறந்தது. முற்றும் துறந்த தவ நிலை, அதாவது அலங்காரம் இல்லாமல் ஆண்டிக் கோலத்தில் பார்க்கும்போது நமக்குள் ஒரு மெய்ஞானம் உண்டாகும் என்பதற்காக. பெரிய ஞானிகளெல்லாம் அந்தக் கோலத்தைக் காண்பதற்காகத்தான் துடிப்பார்கள்.

திங்கள் கிழமையில் காலை நேரத்தில் மலையேறி முருகப்பெருமானை ஆண்டி கோலத்தில் தரிசித்தால், உங்களுக்கு வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நிவர்த்தியாகி  படிப்படியான முன்னேற்றம் மாற்றம் ஏற்படும்.

உங்களுடைய ஜாதகத்தில் பாதிப்பு தரக்கூடிய நிலையில் எந்த கிரகங்கள்  இருந்தாலும்  அந்த கிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு தாக்கம் குறைய  வேண்டுமென்றால், அதற்கான ஒரே தீர்வு பழனி முருகனை ஆண்டி கோலத்தில் திங்கட்கிழமை காலை வேளையில் தரிசனம் வழிபாடு செய்து,பூஜை தானம் தர்மம் அன்னதானம் போன்றவற்றை செய்தால் உங்களது வாழ்வில் நல்ல முன்னேற்றம் நன்மைகள் பல கிடைக்கும்.



Leave a Comment