மஹாலட்சுமியை வழிபட ஏற்ற பொருள்...


மஹாலட்சுமியை வணங்கி வழிபடுவதற்கு ஏற்ற பொருட்களாக இருப்பது தங்க தாமரை பூ, சந்தனம், குங்குமம், வெற்றிலை, உலர் பழங்கள், பழங்கள் மற்றும் வெல்லம் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள், அரிசி மற்றும் தேங்காய்.

வியாழக்கிழமைகளில் மற்றும் முழு நிலவு நாளான பெளர்ணமியில் இலட்சுமி பூஜை செய்வது மிகவும் உகந்ததாகும். இலட்சுமியின் திருவுருவத்தை வடிக்கிற போது, தங்க காசுகள் அள்ளி வழங்குவதை போலவும், அவருக்கு பின் யானைகள் இருப்பது போலவும் உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அவரின் ஐஸ்வர்யத்தை வழங்கும் பலத்தை உலக மக்களுக்கு புலப்படுத்துவதாக உள்ளது.

இலட்சுமி தேவி வழங்க கூடிய ஐஸ்வர்யம் என்பது வெறும் பணம் செல்வத்தை மட்டும் குறிப்பதல்ல. இலட்சுமி தேவியின் அருள் இருப்பவர்களுக்கு புகழ், பலம், வெற்றி, தங்கம், நவதானியங்கள், நல்ல புத்திரர்கள், மகிழ்ச்சி, ஆனந்தம், புத்தி, அழகு, உயர்ந்த இலட்சியம், உயர் தவம், அறம், நல்ல பண்புகள், ஆரோக்கியம், ஆயுள் ஆகிய பதினாறு விஷயங்களும் அவர்களுக்கு கிடைக்கும்.மேலும் இலட்சுமி தேவி பல ரூபங்களில் அருள் பாலிக்கிறார் உதாரணமாக ஶ்ரீதேவி, பூதேவி மற்றும் நீலா தேவி .

மஹாலட்சுமிய அஷ்ட இலட்சுமி என 8 வகையாக வழிபடுகின்றனர். ஒரு மனிதனுக்கு அஷ் லட்சுமி கடாச்சம் அவசியம் தேவை வாழ்வில் உயர்வதர்க்கு. . இந்த பூவை காலையில் தினசரி 8 மகாலட்சுமி (அஷ்டலட்சுமி) பெயரை சொல்லி மகாலட்சுமி படத்தின் முன் அர்ச்சனை செய்ய வேண்டும். ஒரு முக்கிய குறிப்பு தங்கத்திலும் தாமரையிலும் கட்டாயம் வாசம் செய்வால். எனவே தான் இந்த தங்க பூவால் அர்சனை செய்வது மிக மிக விஷேஷமானது.



Leave a Comment