விஜயதசமி பூஜை செய்வதற்கு நல்ல நேரம்....


சரஸ்வதி பூஜை

கல்வி அறிவை தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியை பிரதானமாகக் கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாள் தான் சரஸ்வதி பூஜை.

வழிபடும் முறை :

ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டும். படத்திற்கு அருகம்புல், மலர்மாலைகள் அணிவிக்க வேண்டும்.

மேஜையின் மேல் புத்தகங்களை அடுக்கி, படத்தின் முன் இலை விரித்து, வெற்றிலை பாக்கு, பழம், பொரி, சுண்டல், சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றைப் படைக்க வேண்டும். அதன் பிறகு சரஸ்வதி தேவிக்கு நெய்தீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

சிறு குழந்தைகளுக்கு பிரசாதம், கல்வி உபகரணங்கள் போன்றவற்றை கொடுக்க வேண்டும். மறுநாள், காலையில் புதிதாக இலைபோட்டு வெற்றிலை பாக்கு, பழம், பொரி படைத்து பூஜை செய்த பின் சரஸ்வதி படத்தை எடுத்து விட வேண்டும். மஞ்சள் அல்லது சந்தனத்தில் முகம் வைத்திருந்தால் அதை நீர்நிலையில் கரைத்து செடிகளுக்கு ஊற்றலாம்.

சரஸ்வதி பூஜையின் சிறப்பு :

நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்நாள் கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளாகும்.


சரஸ்வதி பூஜை
விஜய தசமி

விஜயதசமி பூஜை 24-ம் தேதி வருகின்றது, அதாவது ஆயுத பூஜை மறுநாள் வருகின்றது. அதனால் இந்த பூஜையை செய்வதற்கு நல்ல நேரம்

காலை
07:45-08:45
10:45 -11:45
மாலை
04:45-05:45
07:30-08:30 வரை

சுபஹோரை நேரங்கள்
காலை 08:00 முதல் 09:00
(சுக்கிர ஹோரை)
மாலை 04.30 முதல் 06.00 வரை புதன்-சந்திர ஹோரைகள்

வழிபாடு எப்படி.?
ஆயுத பூஜை அன்று வழிபாடு செய்வதற்கு படைக்க வேண்டிய நெய்வேத்தியங்கள் அம்பாளுக்கு பிரியமான சர்க்கரை பொங்கல், புளியோதரை, சுண்டல், பொறி, பழங்கள் ஆகும். அவரவர் வழிபடும் இடத்தில் சுவாமி படங்களை வைத்து தேங்காய், வாழைப்பழம், பூ, வெத்தலை பாக்கு, ஊதுபத்தி, சாம்பிராணி வைத்து விளக்கேற்றி தீபாராதனை காட்டி இறைவனை வழிபடலாம்.



Leave a Comment