கல்கி அலங்காரத்தில் காட்சி தந்த திருப்பதி ஏழுமலையான்...


திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 8-ம்  நாளான இன்று இரவு   குதிரை வாகனத்தில் கல்கி அலங்காரத்தில் பக்தர்களின் கோவிந்தா ஆரவாரத்துடன் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவம் இம்மாதம் 15 ஆம் தேதி சிறப்பாக துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை ஒட்டி தினந்தோறும்   பல்வேறு வாகன சேவைகள் நடைபெற்று வருகிறது,

பிரம்மோற்சவத்தின் எட்டாவது திருநாளான  இன்று இரவு தங்கக் குதிரை வாகனத்தில்  கல்கி அலங்காரத்தில் வாளேந்திய கோலத்தில்  மலையப்ப சுவாமி  நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.



Leave a Comment