நவநீதகிருஷ்ணன் அலங்காரத்தில், சந்திர பிரபை வாகனத்தில் திருப்பதி ஏழுமலையான்...


திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 7-ம்  நாளான இன்று இரவு   வெண்ணை கடைத்தெடுக்கும் நவநீதகிருஷ்ணன் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாளான இன்று இரவு சந்திரபிரபை வாகனத்தின் மீது நவநீதகிருஷ்ணன்  அலங்காரத்தில் பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் மலையப்பன்  நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாட வீதிகளில் காத்திருந்த திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பி சுவாமியை வேண்டினர்.

சூரியன் அக்னி வடிவம், சந்திரன் சாந்த வடிவம் என்பதால் இரண்டும் தனது அம்சமே என்னும் விதமாக சூரியன் மற்றும் சந்திர வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. இந்த வீதிஉலாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.



Leave a Comment