மகாளய அமாவாசை தினத்தில் செய்ய வேண்டியவை.....


முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி, தர்ப்பணம் அமாவாசை தினம் செய்வது மிகவும் சிறப்பானது. இந்த அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு செய்யும் திதியோ அல்லது தர்ப்பணமோ செய்வதால் நம் தலைமுறை தலைக்கும். பொதுவாக ஆண்டு முழுவதும் ஒவ்வொரு வாரத்தில் வரும் பெருமாளுக்கு உகந்த நாளான சனிக்கிழமை தினத்தில் விரதம் இருப்பது சிறப்பானது. நல்ல பலனை கொடுக்கும். அப்படி ஒவ்வொரு வாரமும் விரதம் இருக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை தினங்களிலாவது விரதம் இருந்து பெருமாளைத் தரிசிப்பது உகந்தது.

தற்போது சனிக்கிழமையும், மகாளய அமாவாசையும் கூடி வரும் நாளில் நாம் கட்டாயம் விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு, வீட்டில் தீபம் ஏற்றி இறைவனையும் வழிபடுவது மிகவும் சிறப்பானது.

பொதுவாகச் சனிக்கிழமை விரதம் இருப்பதால் நம்மீது இருக்கும் சனி பகவானின் வக்கிர பார்வை குறையும். இந்த சனி மகாளய அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்வதால் நமக்கும், நம் முன்னோருக்கும் இருக்கும் சனி பார்வை பிரச்சினை விலகும்.

இதனால் முன்னோர்கள் ஏதேனும் சில பாவங்களால் வைகுண்டம் அடைய முடியாமல் இருந்தால், நாம் இந்த நாளில் கொடுக்கும் தர்ப்பணம் அவர்களை வைகுண்டம் அடைய வழிவகுக்கும்.



Leave a Comment