கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷ விழா...


கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னைக்காப்பு சாற்றி,பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள் , சந்தனம் , அபிஷேக பொடி, அரிசி மாவு ,பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலையில் அணிவித்து வெள்ளி கவசம் சாத்தப்பட்ட பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டி அதைத் தொடர்ந்து உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக குடியிருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.



Leave a Comment