திருப்பதி ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது...


திருப்பதி ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.

திருப்பதி ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று முதல் வரும் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு இன்று மாலை கருடன் ஓவியத்துடன் ஏற்பாடு செய்த பல்லாக்கில் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி  தங்க திருச்சி வாகனத்தில் திருமாடவீதிகளில் ஊர்வலமாக வந்து கோவிலுக்குள் சென்றார்.

பின்னர் கோவிலுக்குள் இருக்கும் கொடிமரத்தின் வேத பண்டிதர்கள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் ஆகம சகிஸ்திரத்தின்படி பூமாலைக்கு கருடஓவியம் கொண்ட துணியை சுற்றி சிறப்பாக கொடியேற்றத்தை நடத்தினர். இந்த கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது.



Leave a Comment