திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான தங்க தாமரைகள் வழங்கிய பக்தர்....


திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ. 2  கோடி மதிப்புள்ள 108 தங்க தாமரை நன்கொடையாக வழங்கிய பக்தர்.

ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த டாக்டர் ராஜீவ் ரெட்டி ரூ. 2  கோடி மதிப்புள்ள தங்க தாமரை மலர்களை காணிக்கையாக வழங்கினார். ஏழுமலையானுக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் அஷ்டதள பாத பத்ம ஆரதனை சேவைக்காக 108 தங்க தாமரை மலர்களை  லலிதா ஜூவல்லர்ஸில் பிரத்யேகமாக வேலைபாடுகளுடன் தயாரிக்கப்பட்டன.

இந்த தங்க தாமரை மலர்களை நன்கொடையாளர் ராஜீவ் ரெட்டி   லலிதா ஜுவல்லரி நிறுவன தலைவர் கிரண் குமாருடன் இணைந்து  ஏழுமலையான்  கோயிலிலுக்கு  வி.ஐ.பி. தரிசனத்தில் சென்று வழிப்பாடு செய்தனர். பின்னர்  அர்ச்சகர்களால் தங்க தாமரை மலர்கள்  சுவாமியின் பாதத்தில் வைக்கப்பட்டு ஆசி பெற்ற பின்னர் கோயிலில் உள்ள ரங்கநாதர்  மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கினர்.



Leave a Comment