கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத பிரதோஷ விழா...


கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம்.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து மூலவர் கல்யாண பசுபதீஸ்வரர் சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, அதை தொடர்ச்சியாக பக்தர்கள் வழங்கிய பல்வேறு வண்ண மாலைகளால் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

பின்னர் சுவாமிக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறி சுவாமிக்கு நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பல்வேறு சோடச உபச்சாரங்கள் நடைபெற்று பின்னர் பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆவணி மாத பிரதோஷ விழாவை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment