ராகு கால நேரத்தில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது? ஏன்?


 

ராகு கால நேரத்தில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்பது பலரது பொதுவான கருத்தாகவே இருக்கிறது. ஆனால் இது விசேஷ பூஜைகள் செய்ய, வேண்டிய வரத்தினை பெறுவதற்கான உகந்த நேரம் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பு குறைவாக தான் இருக்கிறது.

 ஒரு நாளில் உள்ள இருபத்தி நாலு மணி நேரத்தில் 1½ மணி நேரம் ராகுவும், 1½ மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றன என்பதை புராணங்கள் கூறுகின்றன. அதில் ராகு வழிபாடு செய்யும் நேரம் ‘ராகு காலம்’ என்றும், கேது வழிபாடு செய்யும் நேரம் ‘எமகண்டம்’ என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் அந்த நேரத்தில் குறைந்திருக்கும் என்பதால்தான், ராகு காலத்தில் சுப காரியங்களைத் தவிர்க்கிறோம்.

அதே சமயம் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிப்பட்டால் சிறப்பு பலன்களை தருகிறது. அதிலும் செவ்வாய் கிழைமை ராகு காலத்தில் துர்க்கையை பூஜிப்பது சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது.

செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் தோஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும், துன்பங்களும் தொடர்ந்தாலோ ராகு கால வழிபாட்டினை மேற்கொண்டு, துர்க்கையை வழிபடுவது நற் பலன்களை தரும்.

துர்க்கையை நோக்கி தீபத்தினை ஏற்றி வழிபடலாம். அதிலும் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றுவது சிறப்பு மிகுந்தது. ராகு கால துர்க்கை பூஜையை இயன்றவரை கோவிலில் செய்வதே நல்லது. கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள்  அவரவர் வீட்டில் விளக்கினை ஏற்றி வழிபடலாம்.

 

ராகு கால துர்க்கை பூஜை வாரத்தில் அனைத்து நாட்களிலும் ,ராகு கால நேரத்தில் துர்க்கையை வழிபட்டு அம்மனின் அருளை பெறலாம். இருப்பினும் குறிப்பிட்ட பிரச்சினைகள் தீர இந்த தினங்களில் வணங்குவது சிறப்பு ஆகும்.

அதன்படி செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கினால், திருமணத் தடை, முன்னேற்றத் தடை, கடன் பிரச்சினைகள், சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை, வீடு, மனை தொடர்பான பிரச்சினைகள், விபத்து பாதிப்புகள் ஆகியவை நீங்கச் செய்யும்.

வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் செய்யும் பூஜையால் குடும்ப பலம் சீராகும். தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும். மகப்பேறு கிட்டும். மனைவி ஆயுள் பலம் கூடும். வாரிசுகள் வாழ்வில் தடைகள் நீங்கும். பொன், பொருள் சேரும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.

ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் செய்யும் வழிபாட்டினால், தீராத நோய்களின் தாக்கம் குறையும். எதிரிகள் பயம் நீங்கும். பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.

அனைவரும் முடிந்த வரை ராகு கால பூஜையை மேற்கொண்டு துர்க்கையின் அருளை பெற்றிடுங்கள்.



Leave a Comment