சரஸ்வதி தேவி காயத்திரி மந்திரம்...


வேத ஸ்வரூபியான பகவான் ஸ்ரீ ஹயக்ரீவருடைய சிஷ்யையே ஸ்ரீ சரஸ்வதி தேவி.எனவே ஸ்ரீ ஹயக்ரீவரை வழிபடுபவர்களுக்குச்  சரஸ்வதி தேவியின் அருள் தானாகவே கிட்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும், எந்தக் கடினமான விஷயத்தையும் எளிதில் விளங்கிக்கொள்ளவும் ,விளக்கிச்சொல்லவும் வல்லவர்களாக விளங்கச் செய்யும்  ஸ்ரீ சரஸ்வதி ,ஸ்ரீ ஹயக்ரீவர் மந்திரங்களை  நாள்தோறும் சொல்லலாம்.

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
தேவி சரஸ்வதி! உனக்கு நமஸ்காரங்கள்.
வரம் தருபவளே!வேண்டியவற்றைத் தருபவளே!
கல்வித் தொடக்கத்தை செய்கிறேன்.
அனைத்தும் அடியேனுக்குச் சித்தி ஆகட்டும்!

இதனை தினமும் ஜெபித்து வர நல்ல நினைவாற்றல் ,கஷ்டமான விஷயங்களையும் விளங்கிக்கொள்ளும் ,விளக்கிச்சொல்லும் திறன் உண்டாகும்.

சரஸ்வதி காயத்திரி மந்திரம் :

‘ஓம் பிரம்ம சக்தியை வித்மஹே
பீதவர்ணாயை தீமஹி தன்னோ
பிராம்ஹீ ப்ரசோதயாத்’

பொருள்: பிரம்ம சக்தியை அறிவோம்.  சரஸ்வதி தேவியை தியானம் செய்வோம். அவள் நமக்கு ஊக்கம் தந்து அருள்புரிவாளாக. சரஸ்வதி காயத்திரி மந்திரத்தையும் 108 முறை சொல்லி வந்தால் சிறப்பான  பலன்களை அன்னை நமக்கு தந்தருள்வாள்.



Leave a Comment