தீபாவளியும் பட்டாசும்!


 

தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதன் அர்த்தம்  பெரியவர்கள் முதல், சிறியவர்கள் வரை, தீபாவளி அன்று பட்டாசுகள் வெடித்து மகிழ்வார்கள். நம்மிடம் உள்ள காமம், குரோதம், லோபம், மோகம், மாச்சரியம் ( மூட எண்ணம் ) ஆகிய தீய சக்திகளை, இறைவனுடைய திருநாமங்களின் மகிமையால் தூள்தூளாக்க வேண்டும் என்பதற்காகவே, தீபாவளியன்று பட்டாசுகளை வெடித்து மகிழ்கிறோம். இந்த இனிய நாளில், நாமும், நம் உள்ளமென்னும் அகல் விளக்கில் அன்பென்னும் திரியேற்றி, கருணை என்னும் நெய் ஊற்றிப் பக்திச் சுடர் ஒளிக்கச் செய்து உலகை அமைதியே ஆட்சி செய்ய உறுதி கொள்ள வேண்டும். அப்போது, இந்தத் தீபாவளித் திருநாள் மட்டுமல்ல, நாம் வாழுகின்ற ஒவ்வொரு நாளும் நமக்குத் தித்திக்கும் தீபாவளிதான்.

 தீபாவளி அன்றைக்குக் காலையிலும், தீபாவளிக்கு அடுத்த நாள் காலையிலும் ஊரைப் புகைமூட்டம் எப்படிச் சூழ்ந்திருக்கிறது என்று சற்று பாருங்கள். எதிரே வரும் ஆள் தெரியாத அளவுக்கு, அந்தப் புகைமூட்டமாக இருக்கும்.

பட்டாசை முதன் முதலில் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் சீனர்கள். பட்டாசு வெடிக்கும் சத்தத்தில் கெட்ட சக்திகள் எல்லாம் விலகி ஓடும் என்று நம்பப்பட்டது. ஆரம்ப காலங்களில் வெடிகள் மட்டுமே வெடிக்கப்பட்டிருந்தது. பட்டாசு வெடிப்பதினால் உண்டாகும் சத்ததினால் தங்களை நெருங்க வரும் கெட்ட சக்திகள்,ஆவிகளை விரட்ட முடியும் என்று நம்பினர்.

 

ஆரம்ப காலத்தில் பட்டாசு என்பது ஆடம்பரப்பொருளாக இருந்தது. நம்முடைய சந்தோசத்தை கொண்டாடும் வகையிலும் அதனை வெளிப்படுத்தும் விதமாக பட்டாசுகளை வெடித்தார்கள். தீபாவளி என்பது வெற்றியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. வெற்றியை கொண்டாடும் மக்கள் தங்கள் சந்தோஷத்தை விண்ணில் இருக்கும் தேவர்களுக்கு தெரிவிப்பதன் அடையாளமாய் தான் பட்டாசு வெடிக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. பட்டாசு சத்தத்தின் மூலமாக தங்களுடைய மகிழ்ச்சியை தாங்கள் வணங்கும் கடவுளுக்கு தெரிவிக்கிறார்களாம்.

பண்டிகைகளில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, மற்றவர்களோடு அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவே பட்டாசுகள் வெடிக்கும் பழக்கம் தோன்றியது. இந்த மகிழ்ச்சி சில நேரங்களில் துயரம் தரக் கூடியதாக மாறி விடுவதுதான் பரிதாபம். 

நம் நாட்டில் நினைத்த இடங்களில் எல்லாம் பட்டாசுகளை கொளுத்திப் போடும் செயல் சாதாரணமாக நடக்கிறது. வீட்டிலிருந்து வெளியே நடந்து போக முடியாத அளவிற்கு வீதிகளில் பட்டாசு குப்பைகளின் குவியல் குவிந்து விடும்.

பொதுவாக முகம், கை, விரல்கள் ஆகியவற்றில் தான் தீக்காயங்கள் உண்டாக வாய்ப்பு அதிகம்.  ஆனால், தீக்காயம் பட்ட கையைத் தண்ணீரில் நனைப்பதற்கு பலரும் தயங்குவார்கள். தீக்காயம் பட்ட உடல் பகுதியைத் தண்ணீரில் நனைத்தால், கொப்பளங்கள் ஏற்பட்டுவிடும் என்ற தவறான நம்பிக்கை மக்களிடம் உள்ளது. தீக்காயத்தைத் தண்ணீரில் எவ்வளவு விரைவில் நனைக்கிறோமோ, அந்த அளவுக்கு விரைவாக காயம் ஏற்பட்ட இடத்தில் வெப்பம் குறைந்து, காயத்தின் தீவிரம் குறையும். கொப்பளங்கள் ஏற்படுவதும் தடுக்கப்படும். 

 

 

 நம்மை பொறுத்தவரை தீபாவளி என்பது மிகவும் பிடித்த பண்டிகையாக விளங்கும். ஆனால் செல்லப் பிராணிகளை பொறுத்த வரை, அது அவர்களுக்கு ஒரு சித்திரவதை ஏற்படுத்தும் பண்டிகையாகும். தீபாவளி என்பது ஒரு இந்து பண்டிகை என அனைவருக்கும் தெரியும். அதனை உலகத்தில் உள்ள பல மக்களும் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்வார்கள். ஆனால் பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் அப்படி இருப்பதில்லை. அது அவர்களுக்கு மரண பயத்தை உண்டாக்கும். வீட்டில் அதிகமாக வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் என்றால் அது நாயும் பூனையும் தான். தீபாவளி பண்டிகையின்ன் போது, அவைகள் வீட்டில் தூக்கமில்லா இரவுகளையே சந்திக்க வேண்டியிருக்கும்.

இந்த பயத்துடன் நின்று விடாமல், தீபாவளியின் போது வெடிக்கப்படும் ராக்கெட் மற்றும் வான வெடிகளால் அவைகள் பாதிக்கப்படுவதும் உண்டு. தீபாவளின் போது வெடிக்கப்படும் பட்டாசுகளில் இருந்து அதிக சப்தம் வருவது அனைவருக்கும் தெரிந்ததே. இது துப்பாக்கி சத்தம் மற்றும் நம் வீட்டிற்கு அருகில் பறக்கும் விமான சத்தத்தை விட அதிக சத்தத்தை எழுப்பும். இந்த சத்தத்தினால் நாய் மற்றும் பூனை போன்ற பிராணிகளுக்கு இது கொண்டாட்டமாக இருப்பதில்லை. இவ்வகை வெடிகள் அவைகளுக்கு பயம், பீதி மற்றும் குழப்பங்களை ஏற்படுத்திவிடும். சாதாரண வெடி சத்தம் நாய்களுக்கு குண்டு வெடிப்பதை போல இருக்கும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். அதற்கு காரணம் அவர்களின் துல்லியமான கேட்கும் சக்தி. அதனால் அவைகளுக்கு சத்தம் என்றாலே பயம் ஏற்படும் நோய் உருவாகலாம். மேலும் வெடிகளில் இருந்து வரும் புகையை சுவாசிப்பதால், வேறு சில உடல்நல கோளாறுகளும் ஏற்படலாம். இந்த தீபாவளியின் போது உங்கள் செல்லப் பிராணிகளின் மீது அதிக அன்பையும், அக்கறையையும் காட்ட உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

 

 தீபாவளிப் பண்டிகையின்போது அதிக மகிழ்ச்சியுடன் இருக்க நினைப்பது அனைவரின் விருப்பம் என்றபோதிலும், கொண்டாட்டங்களின் போது, பாதுகாப்பு அம்சத்தையும் கவனத்தில் கொண்டால் மகிழ்ச்சி எப்போதும் நீடிக்கும்!




Leave a Comment