திருப்பதி தலைமுடி ஏலத்தில் ரூ.6 கோடி வருவாய்


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் செலுத்திய 3ஆயிரத்து 300 கிலோ தலைமுடி காணிக்கை ஏலத்தின் மூலம் ரூ 6.09 கோடி வருவாய் கிடைத்து இருக்கிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப பல்வேறு காணிக்கைகளை வழங்குகின்றனர். அதில் ஒன்றாக மெட்டையடித்து பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர்.

அவ்வாறு பக்தர்கள் செலுத்திய தலைமுடி 3 ரகமாக தரம் பிரிக்கப்பட்டு ஆன்லைனில் திருப்பதியில் உள்ள தேவஸ்தான மார்கெடிங் துறை அலுவலகத்தில் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு தலைமையில் ஆன்லைனில் தலைமுடி விற்பனை செய்யப்பட்டது.

இதில் பல்வேறு ரகமான 3 ஆயிரத்து 300 கிலோ தலைமுடி விற்பனை செய்யப்பட்டதின் மூலம் ரூ 6.09 கோடி வருவாய் கிடைத்துள்ளது.



Leave a Comment