திருப்பதி கோவிந்தராஜபெருமாள் திருமஞ்சன சேவை


திருமலையேறி திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு முன் கீழ் திருப்பதியில் குடி கொண்டிருக்கும் கோவிந்த ராஜ பெருமாளை சேவிக்க வேண்டும் என்பது ஐதீகம். அத்தகைய சிறப்புமிக்க பெருமாள் சயனத் திருக்கோலத்தில் இங்கு சேவை சாதிக்கிறார்.

திருப்பாற்கடல் காட்சியாக ஆதிசேஷன் மீது. நான்கு திருக்கரங்களுடன் சயனித்திருக்கிறார் கோவிந்தராஜ பெருமாள். திருமலையின் ஏழுமலையான் கோயில் கொள்வதற்கு முன்னரே இவர் திருப்பதியில் ஸ்தாபிக்கப்பட்டதால் இவரை ஏழுமலையானுக்கு அண்ணன் என்று பக்தர்கள் அழைக்கிறார்கள். இச் சந்நிதானத்தில் கோவிந்தர் ருக்மிணி, சத்யபாமா, சமேதராக காட்சியளிக்கிறார்.

கையில் செங்கழுநீர் புஷ்பத்துடன் ஆண்டாள், வித்தியாசமாக கோவிந்தராஜருக்கு வலது பக்கத்தில் வீற்றிருப்பது இக்கோவிலின் சிறப்பு அம்சம். அத்தகைய சிறப்பம்ச மிக்க கீழ் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் இன்று திருமஞ்சன சேவை, மற்றும் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.



Leave a Comment