திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் 


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

பள்ளிகள் விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சாமி தரிசனம் செய்ய 20 மணி நேரமாகிறது. 

வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்கு, குடிநீர், உணவு ஆகியவை வழங்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் 72 ஆயிரத்து 882 பேர் சாமி தரிசனம் செய்தனர். ஒரே நாளில் உண்டியல் காணிக்கை  மூலமாக 4 கோடியே 20 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 

பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருவதால் தேவஸ்தானம் சிபாரிசு கடிதங்கள் வரும் 5ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
 



Leave a Comment