பயத்தை போக்கும்...தில்லை காளி!


தேவையற்ற மன குழப்பம், சஞ்சலத்தை நீக்கி அருள்பாலிக்கிறாள் தில்லை காளி. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரின் அமைந்துள்ளது தில்லை காளியம்மன் கோவில். 13 ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னர் கோப்பெருஞ்சிங்கனால் இத்திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது.இத்திருக்கோயில் முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம் தாண்டி உள்ளே நுழைந்ததும் வலது பக்கத்தில் உள்ள தனி சன்னிதியில் ஆனந்த நர்த்தனமாடும் விநாயகரும், இடதுபுற தனிச் சன்னதியில் முருகனும் கிழக்கு திசையை நோக்கி அருள்பாலிக்கின்றனர்.

இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் அம்மன் காளி பிரம்மசாமுண்டேஸ்வரி என்ற பெயரால் நான்கு முகம் கொண்ட சாந்தநாயகியாக மேற்கு முகம் நோக்கி அருள்பாலிக்கிறாள். தொடர்ந்து ஆலயத்தின் கிழக்கு நோக்கிய சன்னிதியில் உக்ர மாகாளியாக எட்டு கரங்களில் ஆயுதங்களைக் கொண்ட தில்லைகாளியாகவும் மேற்கு நோக்கிய சன்னிதியில் சாந்தமான நான்முக பிரம்மசாமுண்டேஸ்வரியாகவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். இங்கு காளி சொரூபத்தில் உள்ள அம்மன் பில்லி சூனிய பூத, பிசாசு, பேய்கள், சினம், பகை கொடிய வியாதிகள், ஆணவம், அகம்பாவம் போன்றவற்றை அழித்துஅருள் பாலிக்கிறாள். 

எனவே மன சஞ்சலம், தேவையற்ற பயம், ஆகிய பிரச்சனை உள்ள பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து தில்லை காளியம்மனை பூஜித்து வணங்கினால். அனைத்து பிரச்சனைகளும் விலகி அவர்கள் வாழ்வில் மகிழ்சியும், வளமும் பெருகும். ஆகையால் தில்லை காளியை வணங்க இத்திருத்தலத்திற்கு நாள்தோறும் பக்தர்கள் வந்த வண்ணமுள்ளனர்.



Leave a Comment