கெங்கையம்மன் திருகோவில் கும்பாபிஷேக வீடியோ 


பூந்தமல்லி அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள கெங்கையம்மன் திருகோவில் மக்களால் புதுபிக்கப்பட்டு 12 வருடங்களுக்கு பின்னர் கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

சென்னையை பூந்தமல்லி அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ளது அருள்மிகு ஸ்ரீ தேவி கெங்கையம்மன் ஆலயம்.இந்த ஆலயம் ஆலயம் மிகவும்பழமை வாழ்ந்த அலயம் ஆகும்.இந்த ஆலயம் கிராம மக்களால் புதுபிக்கப்பட்டு 12 வருடங்களுக்கு பின்னர் கும்பாபிஷேகம்  நடைபெற்றது.

கடந்த மூன்று தினங்களாக கணபதி வழிபாடு, கணபதி ஹோமம், கோ பூஜை, யாக பூஜை,தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு யாகங்களும், பூஜைகளும் நடைபெற்று வந்தன. 

சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க  கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். மேலும் பரிவார மூர்த்தி களுக்கு திருக்குட நன்னிராட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், விஷேச பூஜைகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
 



Leave a Comment