சாய் பாபா அளித்த உறுதிமொழிகள்!


இன்றளவும் ஷீரடி சாய்பாபாவின் பக்தர்கள் பெருகிக்கொண்டேயிருப்பதன் காரணம் அவர் தன் பக்தர்களுக்கு அளித்த உறுதி மொழிகள் தான். அவற்றை காண்போம்

ஷீரடிக்கு வந்து ஷீரடி மண்ணை வணங்குபவர்களுக்கு எந்த விதமான ஆபத்தும் உண்டாகாது.

என் சமாதியின் படி ஏறுபவனுக்கு, அவனின் அனைத்து துக்கங்களையும் போக்கிவிடுவேன்.

எனது உடல் இந்தப் பூவுலகில் இருந்து மறைந்தாலும், துன்பம் என்று துயரப்படும் பக்தன் தன் மனதால் நினைத்தால் போதும் ஓடி வந்து அவன் துன்பம் களைவேன்.

திடமான பக்தி, உறுதியான நம்பிக்கை, பிரிபூரண விசுவாசத்துடன் இருக்கும் பக்தனின் ஆசையை என் சமாதி பூர்த்தி செய்யும்.

நான் உயிருடன் இருக்கிறேன். அதை நீங்கள் உங்களுக்கு ஏற்படும் அனுபவங்கள் மூலம் கண்டிப்பாக உணர முடியும். இதை நீங்கள் சத்தியமாக உணர்ந்து கொள்ள முடியும். என்று பாபா கூறினார்.

 

 



Leave a Comment