இறைவனை பூஜிப்பதால்...கிடைக்கும் பலன்கள்!


பூஜை செய்யும்போது பல்வேறு உபசாரங்களை இறைவனுக்குச் செய்கிறோம். இப்படிச் செய்வதால் என்ன பலன் கிடைக்கும் என்பதை காண்போம்

அபிஷேகம் செய்தால் பாவம் அகலும்

பீட பூஜை செய்தால் சாம்ராஜ்யம் கிடைக்கும்.

சந்தனம் சாத்துவதால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

புஷ்பம் சமர்ப்பித்தால் சௌக்கியம் தரும்.

தூபம் காட்டுவதால் நல்ல குணங்கள் கிடைக்கும்.

தீபம் காட்டுவதால் உடல் ஒளியைத் தரும்.

நைவேத்தியம் மகா போகங்களைக் கொடுக்கும்.

தாம்பூலம் சமர்ப்பித்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

நமஸ்காரம் செய்தால் புண்ணியம் கிடைக்கும்.

ஜபம் செய்தால் அஷ்ட ஐஸ்வரியங்கள் கிடைக்கும்.

ஹோமம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும்.

அன்னதானம் செய்தால் எல்லா தெய்வங்களையும் திருப்திப்படுத்தும்.



Leave a Comment