கோவில் அபிஷேக தீர்த்தத்தின் மகிமைகள்!


திருக்கோவில்களின் அபிஷேக தீர்த்தம் மிகவும் புனிதமானது. இந்தத் தீர்த்தத்தை இரண்டு கைகளாலும் பெற்று அப்படியே உட்கொள்ள வேண்டும். அப்படிப் பெறும்போது விரல்களில் இடுக்கில் கீழே சிந்தாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கைகளின் அடியில் துணியை வைத்துப் பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

தீர்த்தத்தை உட்கொண்ட பிறகு கைகளில் ஒட்டியிருக்கும் நீரும் கீழே சிந்தாமல் இருக்க வேண்டும் என்பதால் கைகளையே ஒன்றின் மீது ஒன்றாகத் தேய்த்துக் கொள்வதும், கண்களில் ஒற்றிக்கொள்வதும், தலையில் தேய்த்துக் கொள்வதும் ஆகிய பழக்கங்கள் ஏற்படத் தொடங்கின. அபிஷேக தீர்த்தம் சிறிதும் கீழே சிந்தக்கூடாது என்பதே இவற்றின் அடிப்படையான உண்மை.



Leave a Comment