ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள்


ஸ்ரீ ராமசந்திரர் வனவாசம் பண்ணுகையில், ஒரு நாள் தனது வில்லையும் அம்பையும் தரையில் நிறுத்திவிட்டு, தாக சாந்தி செய்து கொள்வதற்காகப் பம்பா சரஸ் என்ற தடாகத்தில் இறங்கினார். மேலே ஏறி வந்து பார்க்கையில் தமது வில் ஒரு தவளையை ஊடுருவிச் சென்றதன் காரணமாக அந்தத் தவளை இரத்ததில் தோய்ந்திருப்பதைக் கண்டார்.

ஸ்ரீ ராமன் இதற்கு மிகவும் வருந்தி, ஏ, தவளையே நீ ஏதாவது சத்தம் போட்டிருக்கலாமே; அப்போது நீ இருப்பதை நான் தெரிந்து கொண்டிருப்பேனே. உனக்கு இந்தக் கதியும் நேர்ந்திராதே” என்றார்.

ராமா ! எனக்கு ஆபத்து நேரும்போது, “ராமா என்னைக் காப்பாற்று” என்று சொல்வேன். ஆனால் நீயே என்னைக் கொல்லும்போது, நான் யாரிடம் என் குறையைச் சொல்லி முறையிட்டுப் பிரார்த்திப்பது? என்று தவளை பதில் சொல்லிற்று”.

இந்தக் கதை சொல்லும் நீதி என்ன?

எறும்பு முதல் யானை வரை எல்லா ஜீவன்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் வல்லமையும் வள்ளன்மையும் படைத்தவன் இராமன்.
 

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை... 
ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்புர், சென்னை 600 004.

 



Leave a Comment