சக்தி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்... வீடியோ காட்சி


உளுந்தூர்பேட்டை  கந்தசாமி புரத்தில் உள்ள சக்தி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரம் கந்தசாமி புரத்தில் அருள்மிகு சக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் ராமகிருஷ்ணா  குருகுலத்தில் இருந்து வந்திருந்த பத்மபிரியா அம்மாள் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியையொட்டி நேற்றைய தினத்தில் இருந்து யாகசாலை பூஜைகள் துரைசாமிசிவாச்சார்யார், மற்றும் சங்கரசிவம் குருக்களின் தலைமையில் இரண்டு நாட்களாக யாகசாலை பூஜைகள் மிக சிறப்பாக நடைபெற்றது. 

நேற்றிலிருந்து இந்த பூஜையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர் இன்று காலை சரியாக 9 மணியளவில் யாகசாலையில் இருந்து புறப்பட்ட கலசங்கள் சக்திவிநாயகர்,  தட்சிணாமூர்த்தி மற்றும் நவகிரக மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மிக  மிக சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

இதில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயசங்கர், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சௌ. ராமலிங்கம், லட்சுமிநாராயணன், ஜனார்த்தனன்,  குரு. கணேசன், தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கர் விழுப்புரம் மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு ,அமுதசுரபி விநியோக சங்க தென் மண்டல செயலாளர் ராமுசுப்பிரமணியன், உட்பட ஊர் முக்கியஸ்தர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர் வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



Leave a Comment