அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.... வீடியோ


அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.  ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில்  உள்ள பல ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ  பொன்னியம்மன் திருக்கோயிலில்  ஜூர்னோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.  முன்னதாக நேற்று  கோ பூஜை, கணபதி பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ தீபாராதனையும் நடைபெற்றது.

 அதே போல் இரவு அம்மனுக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குராற்பணம், கலாகர்ஷணம் மற்றும் தீபாராாதனையும் நடைபெற்றது.   அதனைத் தொடர்ந்து இன்று காலை மஹா சங்கல்பம், தத்வார்ச்சனையும்,  அவம்ருத யாகமும் விசேஷ ஹோமமும் 10 மணியளவில் கலசத்தை கோயில் நிர்வாகிகள் எடுத்துவர, கலசத்தில் உள்ள புனித நீரை விமான கோபுரத்தில் ஊற்றினர். 

அப்போது கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என கோஷம் எழுப்பினர்.  கலசத்தில் கொண்டு வந்த புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்தில் திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
 



Leave a Comment