காஞ்சி காமாட்சி அம்மன் வெண்முத்து சப்பரத்தில்  திருவீதியுலா வீடியோ.....


உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில்  பிரம்மோற்சவம்  கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 

 6ம் நாள் திருவிழாவை  யொட்டி  காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஏலக்காய், முந்திரி,பாதாம் ஆகியவற்றால் செய்யப்பட்ட மாலையால் சிறப்பு அலங்காரத்தில் காமாட்சி அம்மனும், சரஸ்வதி, லட்சுமி தேவியர்கள் வெள்ளிக்கவசத்துடன் வெண் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில்  எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

பின்னர்  மேளதாளம் முழங்க, சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஒலிக்க வெண்முத்து சப்பரத்தில் 4 ராஜ வீதிகளில்  திருவீதியுலா வந்தார்.

காமாட்சி அம்மனை வரவேற்று வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள்  காத்திருந்து  கற்பூரம் ஆர்த்தி எடுத்து வணங்கி வழிபட்டு சென்றனர்.
 



Leave a Comment