திருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சி.... 


 திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி ஆலயத்தில்   நடைபெற்ற  ராகு பெயர்ச்சி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 

 நவகிரகங்களில் 'ராகு' க்கான பரிகாரத் தலமாக விளங்குவது கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி ஆலயம் ஆகும் . இவ்வாலயத்தின் தென்மேற்கு மூலையில் ராகு பகவான் ,நாகவல்லி, நாககன்னி , என்ற தனது இரு மனைவியருடன் பூரண சரீரத்துடன் மங்கள ராகுவாக அருள்பாலித்து வருகிறார் .ராகு பகவான் இவ் ஆலய மூலவர் நாகநாதசுவாமி வழிபட்டு  சாப விமோசனம் பெற்றதாக  ஆலய தல புராணங்கள் கூறுகிறது .

இத்தலத்து மூலவர் நாகநாத  சுவாமியை  சூரியன் ,சந்திரன் , பிரம்மா  ,கார்க்கோடகன் , ஆகியோர்  வழிபட்டதாகவும்   புராணங்கள் கூறுகிறது.இவ்வாலயத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் ஒன்றாக ராகுபெயர்ச்சி  விளங்குகிறது .

ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ராகு பெயர்ச்சி இன்று மதியம் 1 .25 மணிக்கு  ராகு பகவான்  ,கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்ச்சி யானார்.  ,ராகு பெயர்ச்சியை முன்னிட்டு  ரிஷபம்  ,மிதுனம் ,கடகம் ,கன்னி, விருச்சிகம், தனுசு ,கும்பம் ,மீனம், ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது .

 ராகு பெயர்ச்சியை முன்னிட்டு ராகு பகவானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் , உள்ளிட்ட பல்வேறு மங்கல பொருட்களால் சிறப்பு அபிசேகங்கள் நடைபெற்றது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராகு பகவானை தரிசனம் செய்தனர். 
 



Leave a Comment