திருத்தணி முருகன் கோயிலில் மாசிப் பெருவிழா தொடங்கியது.... .


திருத்தணி முருகன் கோயில் மாசிப்பெருவிழா இன்று தொடங்கி வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் தினந்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் பக்தர்கள் அருள்பாலிக்கிறார்.

முருனனின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியம் சுவாமி திருக்கோயிலில் மாசித்திருவிழா இன்று காலை 5.30 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

மாசித்திருவிழாயொட்டி  இன்று அதிகாலை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தங்க கவசம், வேல், பச்சைகள் முத்து, அணிவித்து தீபாராதணை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோயில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மேளதாளங்கள் முழங்க கொடியேற்றும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டனர். இன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற உள்ள மாசித் திருவிழாவில் உற்சவர் கடவுள் தினமும் காலை மாலை நேரங்களில் வாகன் சேவைகளில் எழுந்தருளி மலைக் கோயில் ராஜ வீதிகளில் உலா நடைபெறும் என்பதால் பக்தர்கள் அதிக அளவில் முருகன் கோயிலுக்கு வருவார்கள்ள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
 



Leave a Comment