மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீபாவளி சிறப்பு தரிசனம்!


தீபாவளியை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம், தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தரிசனம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் .... ஐப்பசி பூரத்தையொட்டி 3-ஆம் தேதி காலை 10 மணியளவில் மூலஸ்தான மீனாட்சி அம்மனுக்கும், உற்சவர் அம்பாளுக்கும் ஏத்தி இறக்குதல் சடங்குகள் நடந்து தீபாராதனை நடைபெறும்.

தீபாவளியன்று காலை, மாலை இரு வேளைகளிலும் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம், தங்க கவசமும், சொக்கநாத பெருமானுக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்பட்டு சிறப்பு தரிசனம் செய்விக்கப்படும்.

ஐப்பசி திருவிழா நடைபெறும் 6-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை உபயதாரர்கள் சார்பில் திருக்கல்யாணம், தங்கரத உலா ஆகிய சேவைகள் நடைபெறாது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது



Leave a Comment