அறுபதாம் கல்யாணம் செய்வது ஏன்?


ஒருவருக்கு 60 வயது முடிந்து 61ம் வயது தொடங்கும் நாளில் 60ம் கல்யாணம் செய்து கொண்டாடுகிறார்கள்.

ஒருவருக்கு 60 வயது முடிந்து 61ம் வயது தொடங்கும் நாளில் காலயவனன், சுதூம்ரன் என்னும் தேவதைகள் உடலில் புகுந்து இந்திரியங்களை வலு இழக்கச் செய்கின்றனர். இதனால் உடலைப் பலப்படுத்தவும், ஆயுள் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் சஷ்டியப்த பூர்த்தி என்னும் அறுபதாம் கல்யாணம் நடத்த வேண்டும்.

ஒருவர் பிறக்கும் போது வான மண்டலத்தில் நவக்கிரகங்கள் எந்த இடத்தில் சஞ்சாரம் செய்தனவோ, அதே ராசிகளில் மறுபடியும் தொடங்குவது 61 வயது தொடங்கும் நாளில் மட்டும் தான். அதனால் இந்த விழாவை ஜென்ம (பிறந்த) நட்சத்திர நாளிலேயே நடத்த வேண்டும் என்கிறது சாஸ்திரம்.



Leave a Comment