கஜகேசரி யோகம் தரும் நவக்கிரக விநாயகர்!


செங்கல்பட்டு படாளம் கூட்ரோடு வழியாக வேடந்தாங்கல் செல்லும் வழியில் அமைந்துள்ளது ஸ்ரீ அம்ருதபுரி ராமானுஜ யோகவனம் என்கிற தியான மண்டபம். இங்கு அபூர்வமான கஜகேசரியோகம் கொடுக்கக்கூடிய நலம் தரும் நவக்கிரக விநாயகர் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சுமார் 12 அடி உயரத்தில் உள்ள ஸ்ரீ விநாயகப் பெருமானை, அவரது திருமேனியில் முன்புறம் அமைந்துள்ள நவக்கிரகங்களுடன் தரிசனம் செய்யலாம். விநாயகரின் பின்புறம் யோக நரசிம்மரை சேவிக்கலாம்.

இந்த நவக்கிரக விநாயகர் தரிசனம், அனைத்துவிதமான தோஷங்களையும் நீக்கி வாழ்வில் நலன்கள் தரவல்லது. இங்கு விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.



Leave a Comment