பார்த்தசாரதி கோயில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை


திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி கோவிலில் இன்று (11-07-2018)  நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை மற்றும் ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது.108 திவ்விய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படும் இக்கோவிலில் எம்பெருமான் மகாபாராதப் போரின்போது  பார்த்தனுக்கு தேரோட்டிய சாரதி வடிவில் காட்சியளிக்கிறார்.

இத்திருதலத்தில் மூலவர் பார்த்தசாரதிக்கு நேர் பின்புறமாக யோக நரசிம்மராக சிங்கப் பெருமாள் காட்சியளிக்கிறார். இவருடைய சந்நிதியில் தீர்த்தம் மேலே தெளிக்கப்பட்டால் தீயசக்திகள் அனைத்தும் ஓடிவிடுமென்பது பக்தர்களின் நம்பிக்கை. அத்திரி முனிவருக்கும் காட்சி தந்த கோலத்தில் இருப்பதால் இவரைத் தெள்ளிய நரசிம்ம சுவாமி என்று பக்தர்கள் அழைக்கிறார்கள். அத்தகைய சிறப்புமிக்க நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை மற்றும் ஊஞ்சல் சேவை நிகழ்ச்சிகள் இன்று (11-07-2018) நடைபெறுகின்றன.

 



Leave a Comment