புரட்டாசியில் ஏழுமலையானை தரிசிக்க டிக்கெட்


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவுக்கான தரிசன டிக்கெட் முன்பதிவு வரும் 10-ம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்தாண்டு அக்டோபர் 10-ல் துவங்கி அக்டோபர் 18 வரை புரட்டாசி நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. அக்.18-ல் கருட சேவை நடைபெறுகிறது.

அக்டோபர் மாதத்துக்கான தரிசன டிக்கெட் மற்றும் தங்கும் விடுதி வசதி முன்பதிவு ஜூலை 10-ம் தேதி முதல் துவங்குகிறது.

முன்பதிவு செய்ய விருப்பமுள்ளவர்கள் ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்து இருக்கிறது.



Leave a Comment