ஏப்ரல் 18 ... அட்சய திருதியை


பொன் கிடைத்தாலும் புதன் கிடைப்பதில்லையாம் அந்தப் புதனில் பிறக்கிறது இந்த அட்சய திருதியை.
“அட்சய” என்றால் குறைவில்லாதது என்று பொருள். இந்த அட்சய திருதியை மகாலட்சுமிக்கான நாள். எனவே இந்த நாளில் மகாலட்சுமி பூசை செய்வது அற்புதமான பலன்களைத் தரும்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பின்னர் மூன்றாவது நாளில் மூன்றாம் பிறை நாளன்று வருவதே அட்சய திருதியை நாள். இந்த வருடம் சித்திரை மாதம் 5 ஆம் நாள் (18-04-2018) அன்று அட்சய திருதியை வருகிறது.
அட்சய திருதியை நாள் முன்னோர்களை நினைத்து வணங்குவதற்கும் சிறந்த நாள். காரணம் முன்னோர்கள் அருளால், குடும்பத்தில் சாந்தி, ஆரோக்கியம், ஐஸ்வரியம் கிடைக்கும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.



Leave a Comment