ஒன்பது நந்திகள்...ஓரே இடத்தில்!


 நந்தீஸ்வரருக்கு தனிக்கோயில் இருப்பதே அபூர்வம். அதிலும் ஒன்பது நந்திகளை ஒரே இடத்தல் தரிசிப்பது எத்துணை அபூர்வம். அத்தகைய சிறப்புமிக்க நவ நந்திகள் ஆந்திர மாநிலத்தில் நந்தியால் என்னும் ஊருக்கு 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளன. சிவாதனன் என்பவரின் மகனான நந்தன் தவம் புரிந்து சிவபெருமானுக்க வாகனமாக சுவீகரிக்கப்பட்ட இந்த இடம் 'நந்தி மண்டலம்' என அழைக்கப்படுகிறது. இங்கே நந்திகேஸ்வரன் 'மகா நந்தி' என்ற பெயரோடு அவதரித்தார் என்று கூறப்படுகிறது.

மேலும் இங்குள்ள ஒன்பது நந்திகள் சிவ நந்தி, பிரம்ம நந்தி, விஷ்ணு நந்தி,விநாயக நந்தி, பத்ம நந்தி, சூரிய நந்தி, சோம நந்தி, கருட நந்தி, நாக நந்தி, என்று வணங்கப்படுகிறது.



Leave a Comment