அயல் நாட்டில் பணிப்புரிய அருள் புரியும்..சரஸ்வதி!


சென்னை தியாகராய நகரில் தபால் நிலையத்துக்கு அருகில் இருக்கிறது. அனுக்கிரக விநாயகர் ஆலயம். உயர்கல்விப் படிப்புக்காக மனு கொண்டு வரும் மாணவர்கள், புதிய அல்லது உயர்வான பணிக்காக விண்ணப்பம் எடுத்து வரும் இளைஞர்கள், பாஸ்போர்ட்டுக்காக மனு செய்பவர்கள் எல்லோரும் இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள்.

பக்கத்து தபால்நிலையத்துக்கு போக வேண்டியவர்கள் இந்தக் கோயிலுக்கு வருவானேன்? தம் மனுக்களையும் விண்ணப்பப் படிவங்களையும் தபால் மூலம் அனுப்புவார்கள். இந்த சரஸ்வதி தேவியை வழிபட்டு அதன்பிறகு இவ்வாறு செய்தால் தம் விருப்பங்கள் நிறைவேறும் என்று நம்புகிறார்கள்!

பளிங்கால் ஆன சரஸ்வதி தேவி விக்ரகம் கொள்ளை அழகு. பட்டுப் பீதாம்பரம் சார்த்தி தங்கமயமான கிரீடம் சூட்டி, பெரிய தாமரையையும், தோளில் சூட்டி அழகுக்கு அழகு செய்கிறார்கள். அங்கே விக்ரகம் வட இந்திய பாணியில் இருந்தாலும் பூஜை, வழிபாடெல்லாம் தமிழ் வழக்கப்படியே நடக்கின்றன.



Leave a Comment