சபரிமலை ஐயப்பன் கோயிலில் விஷூ 'கைநீட்டம்'


சபரிமலையில் விஷூ பண்டிகையை ஒட்டி பக்தர்களுக்கு தந்திரியும், மேல்சாந்தியும் விஷூ 'கைநீட்டம்' வழங்கினர். சபரிமலையில் சித்திரை விஷூ பூஜைகள் நடந்தது.

கடந்த 11ம் தேதி முதல் வழக்கமான பூஜைகளுடன் இரவு 7:00 மணிக்கு படி பூஜையும் நடந்தது. சித்திரை ஒன்றாம் தேதி கடந்த 14ம் தேதி பிறந்தது. ஆனால் கேரள பஞ்சாங்க கணக்கு படி நேற்றுதான் கேரள கோயில்களில் விஷூ கொண்டாடப்பட்டது.

அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்ததும் பக்தர்கள் கோயிலுக்குள் அமைக்கப்பட்டிருந்த காய்கனி அலங்காரத்தை தரிசனம் செய்தனர், தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி, ஆகியோர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் மற்றும் பக்தர்களுக்கு நாணயங்களை 'கைநீட்ட'மாக வழங்கினார். ஏப்.,18 இரவு 10:00 மணி வரை நடை திறந்திருக்கும்.



Leave a Comment