சபரிமலை ஐயப்பன் கோயில் நடை எப்ரல் 10ஆம் தேதி திறப்பு


விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 10-ந் தேதி திறக்கப்படுகிறது. 18-ந் தேதி வரை 9 நாட்கள் பூஜைகள் நடைபெறுகிறது. 10 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.
11-ந் தேதி முதல் வழக்கமான பூஜை மற்றும் வழிபாடுகளுடன் நெய் அபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும்.
15-ந் தேதி விஷூ பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து கனி காணுதல் வைபவம் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு நாணயங்களை கை நீட்டமாக தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் வழங்குகிறார்கள்.
சித்திரை மாத பூஜைகளுக்கு பின் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 18-ந் தேதி இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் இசைக்கப்பட்டு அடைக்கப்படும்.
விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 9 நாட்கள் பூஜைகள் நடைபெறும். எனவே ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் முக்கிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் பம்பைக்கு இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



Leave a Comment