திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழா


திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா மார்ச் 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் பங்குனி பெருவிழா மிக சிறப்பு வாய்ந்ததாகும். இந்த திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 15 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழா மார்ச் 21 ஆம் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதி வரை 15 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக வருகிற 30-ந்தேதி பங்குனி உத்திரமும், 31-ந்தேதி சூரசம்ஹார லீலை நடக்கிறது அன்று ஏராளமான பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 1-ந்தேதி முருகப் பெருமானுக்கு தங்கிரீடம் சூட்டி, நவரத்தினங்களான செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடக்கிறது. திருவிழாவின் முத்தாய்ப்பாக 2-ந்தேதி முருகப்பெருமான்-தெய்வானையின் திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கிறது.



Leave a Comment